Из-за периодической блокировки нашего сайта РКН сервисами, просим воспользоваться резервным адресом:
Загрузить через dTub.ru Загрузить через ClipSaver.ruУ нас вы можете посмотреть бесплатно Om Siva Siva Om | Powerful Siva Mantra | ஓம் சிவ சிவ ஓம் | மகா சக்தி வாய்ந்த சிவ மந்திரம் или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Роботам не доступно скачивание файлов. Если вы считаете что это ошибочное сообщение - попробуйте зайти на сайт через браузер google chrome или mozilla firefox. Если сообщение не исчезает - напишите о проблеме в обратную связь. Спасибо.
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
ஓம் சிவ சிவ ஓம் :- ******************** ஓம் -- ஓரெழுத்து மந்திரம் (இரு முறை) -- இரு எழுத்துக்கள் சிவ -- ஈரெழுத்து மந்திரம் (இரு முறை) -- நான்கு எழுத்துக்கள் ஆக மொத்தம் ஆறு எழுத்துக்கள் (சிவம் - 5 + சக்தி - 1). சிவனும், சக்தியும் சம அளவில் கலந்த அற்புத மந்திரம் தான் ஓம் சிவ சிவ ஓம். சிவ சிவ - சந்நியாசிகளுக்கு மட்டுமே உரித்தானது (சிவ தத்துவம் மட்டும் தனித்திருப்பது). ஓம் என்ற மந்திரமே அனைத்து மந்திரங்களுக்கும் சக்தி தருவது. சக்தியின் வடிவுடையது. ஆதிசக்தியை குறிப்பது. ஓம் சிவ சிவ ஓம் --- இல்லற நெறியாளர்களுக்கு உகந்தது (சிவ சக்தி தத்துவமானது). சிவசக்தி தத்துவமே குமரக்கடவுள் (ஆறுமுகம் - ஆறு எழுத்துக்கள்). சிவசக்தி வடிவமே உலக தத்துவம். இதுவே லிங்க யோனி தத்துவம். சிவனும் சக்தியும் இணைந்தால் தான் உலக இயக்கம். திருமூலரின் மூலமந்திரம் - ஓம் திருமூலர் அருளிய மந்திரம் - சிவ சிவ இதை சம அளவில் சேர்ப்பதால் கிடைப்பதே ஓம் சிவ சிவ ஓம். தமிழ் மெய்யெழுத்துக்கள் --- 18 சித்தர் ஏடுகளில் கூறப்பட்ட சித்தர்களின் மூலமந்திரங்கள் --- 18 அவற்றுள் முதல் (சும் -- நந்தீசர்) மற்றும் கடைசி (ஓம் -- திருமூலர்) இவற்றை நீக்கி கம் மற்றும் ஙம் இவற்றை சேர்க்க கிடைப்பது உயிர்-மெய் வரிசை (கம், ஙம், சம்,.......,னம்) மொத்தம் - 18. இவற்றில் புதிதாக சேர்க்கப்பட்ட மூலமந்திரம் --- கம் (கணபதியின் மூலமந்திரம்). அவ்வாறெனில் ஙம் என்ற மந்திரம் ஆதி சித்தர் காகபுசுண்டர் சித்தர் பெருமானின் மூலமந்திரமாக தான் இருக்க முடியும். ஆறு ஆதார தியான மந்திரங்கள்: ************************************* மூலாதாரம் -- கணபதி -- ஓம் சிவா சுவாதிட்டானம் -- பிரம்மா -- நம் சிவ ஓம் மணிபூரகம் -- விஷ்ணு -- மங் சிவ ஓம் அநாகதம் -- ருத்திரன் -- சிங் சிவ ஓம் விசுத்தி -- மகேஸ்வரன் -- வசி சிவ ஓம் ஆக்ஞை -- சதாசிவம் -- யம் சிவ ஓம் மேற்கண்ட ஆறு ஆதார தியான மந்திரங்களிலும் நம்முடைய ”ஓம் சிவ சிவ ஓம்” மந்திரம் ஒளிந்துள்ளது. "ஓம் சிவ சிவ ஓம்" மந்திர ஜெபத்தின் அபூர்வ ரகசியங்கள். ***************************************************************** நமது குடும்பக் கடமைகளை நிறைவேற்றிக்கொண்டே நாம் சிவ சிந்தனையில் ஈடுபடவும்,நாம் இறையருளைப் பெறவும் ஏற்ற மந்திரம் ஓம்சிவசிவஓம் ஆகும். ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு முறைப்படி தீட்சை கூட வாங்க வேண்டிய அவசியம் இல்லை; ஆனால், ஓம்நமச்சிவாய மந்திரத்தை விடவும் விரைவாக உயிரூட்டம் பெறும் மந்திரம் ஓம்சிவசிவஓம் ஆகும். நாம் நமது ஜாதகப்படி எந்த யோகத்தில் பிறந்திருந்தாலும் சரி,அல்லது எந்த தோஷத்தில் பிறந்திருந்தாலும் சரி,அவை அனைத்தையும் நீக்கி நம்மை நிம்மதியாகவும் செல்வச் செழிப்போடும் வாழ வைக்கும் மந்திர ஜபம் ஓம்சிவசிவஓம் ஆகும். ஒரே இடம்,ஒரே நேரம் என்ற கொள்கை அடிப்படையில் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க நம்மை பழகிக் கொள்ள வேண்டும்.(நமது வீட்டில் எந்த இடத்தில் முதல் நாளன்று ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கிறோமோ, அதே இடத்தில் மட்டும் தினமும் ஜபித்து வர வேண்டும்;தினமும் எந்த நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தோமோ,அந்த நேரத்தில்=முடிந்த வரையிலும் ஜபித்து வருவதால் அற்புதமான பலன்களை உணரலாம்) இப்படிப்பழக்கப்படுத்துவதன் மூலமாக ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தில் சக்தியை ஓரிரு மாதங்களில் உணரத் துவங்கலாம்.ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்த முதல் 15 நாட்களுக்கு சிலருக்கு ஒரு மாதம் வரையிலும் மனக்குழப்பம் வரத் தான் செய்யும்.ஏனெனில்,நமது விதியை நாமே ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்குவதன் மூலமாக மாற்றத் துவங்குகிறோம்;அதனால்,நாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கிய ஒவ்வொரு நாளுமே ஜபிக்கும் நேரத்தில் தேவையில்லாத சிந்தனைகள்,காட்சிகள்,மனக்குழப்பங்கள் வரத் தான் செய்யும்.மன உறுதி உள்ளவர்களுக்கு 16 வது நாளிலிருந்தும், மன உறுதி குறைவாக இருப்பவர்களுக்கு 31 வது நாளிலிருந்து மனக்குழப்பங்கள் முழுமையாக விலகிவிடும். ஆறு மாதங்கள் வரையில்(சிலருக்கு ஒன்பது மாதங்கள் வரையிலும்) தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தால்,அவர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அவர்களே சக்திவாய்ந்த மனிதராக இருப்பார்;அவர் சிடுமூஞ்சியாக இருந்தால்,கலகலப்பானவராக மாறிவிடுவார்; எப்போதும் கவலைப்படுபவராக இருந்தால்,அந்த கவலைகளை ஒழித்துக்கட்டும் வல்லமையை அடைந்துவிடுவார்;நிறைய கடன்களோடு இருந்தால்,அந்த கடன்கள் தீர வழி கிடைக்கத் துவங்கும்;பலவித அல்லது ஓரிரு கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தால் அத்தனை பழக்கங்களும் அவரை விட்டு விலகிச்செல்லத் துவங்கிவிடும். ஒரு வருடம் வரை தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து முடித்திருந்தால்,நமது உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு நாடி மையம் மற்றும் வர்மமையங்களிலும் நமது ஜப எண்ணிக்கை ஒருமுறை பதிவாகியிருக்கும்.நாமே சிவ அம்சமான ருத்ரனாகிவிடுவோம்;ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு சக்தி மையத்திலும்(நாடிகள் மற்றும் வர்மப் புள்ளிகள்) நூறுமுறை ஓம்சிவசிவஓம் மந்திர ஆற்றல் நிரம்பியிருக்கும்.ஆறு அல்லது ஏழாம் ஆண்டிலிருந்தே நாம் ,நம்மைச் சுற்றியிருப்பவர்களின் எண்ண ஓட்டங்களைத் தாமாகவே அறியும் குணத்தைப் பெற்றுவிடுவோம்;நமக்கு சில சிவ தரிசனங்கள் கிடைத்திருக்கும்; ஜோதிட பலன்கள்,நவக்கிரக பாதிப்புகள்,பஞ்சபூத பாதிப்புகள் என்று எதுவும் நம்மை அண்டாது;நாமே சித்த சக்தியாக உருமாறிவிடுவோம்; அப்படி மாறினாலும்,நாம் நமது குடும்ப மற்றும் சொந்தக் கடமைகளை கைவிடமாட்டோம். அனைவரும் அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று நீடூடி வாழ்க ஓம் நமசிவாய தவத்திரு ஆனந்தகிரி ஸ்வாமிகள் #omsivasivaom #sivamantra #ஓம்சிவசிவஓம்